மார்க்சிஸ்டுகள் மரண வியாபாரிகள்

 கேரளத்தில் நடந்த அரசியல் கொலைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என அறியப்படும் கண்ணூர் மாவட்ட சிபிஎம் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு கொலை நடந்தபிறகு, மார்க்சிஸ்ட் தலைவர்கள் மாநில அளவில் பஞ்சாயத்து பண்ணி எங்கள் கட்சிக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமே கிடையாது என்று அறிக்கை விடுவார்கள்.

2014 செப்டம்பர் 1 அன்று ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் மனோஜ் கொலையின் போதும் இப்படித்தான் நடந்தது. மார்க்சிஸ்ட் ரவுடிகள் அவரை கோரமாக கொலை செய்தார்கள். அதையடுத்து, அந்தக் கட்சி இந்த கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை வெளியிட்டது. இந்த கொலை குறித்து CBI விசாரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஸ்வஹிந்து பரிஷத் அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்தின. இந்த அழுத்தம் காரணமாக கடைசியில் மாநில (காங்கிரஸ்) அரசு வழக்கை CBI யிடம் ஒப்படைத்தது.

கொலை நடந்து 6 மாதங்கள் ஆனபிறகு, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மார்ச் 7 அன்று நீதிமன்றத்தில் CBI அளித்த குற்றப்பத்திரிகை, மனோஜின் கொலை அரசியல் பழிவாங்கல் என்பதை அம்பலப்படுத்தியது. கேரளத்தின் தலச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 120 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் உரிய ஆவணங்களும் சாட்சியங்களும் இடம் பெற்றிருந்தன.

கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் பாஜகவில் இணைந்ததுதான் அரசியல் பழிவாங்கலுக்குக் காரணம் என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட மனோஜிக்கும் கொலையாளிகளுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்று புலனாய்வில் தெரிய வந்ததால் இது அரசியல் பழிவாங்கல் என்று நிரூபணம் ஆயிற்று. எவராவது கட்சியை விட்டுவிட்டு வெளியேறினால், அவருக்கு மனோஜின் கதிதான் என்று மார்க்சிஸ்ட் ஊழியர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூன்று கிளைகள் சம்பந்தப்பட்டிருப்பதை குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தக் கொலையில் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தார்கள். அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். CBI நடத்திய இந்த புலனாய்வினால் முன்பு ஒரு மார்க்சிஸ்ட் தலைவர் கொலை செய்யப்பட விவகாரத்தில் நிஜமான பின்னணி அம்பலமாகியுள்ளது.

இந்தக் கொலையை நாங்கள் செய்யவில்லை என்று இதுவரை மார்க்சிஸ்டுகள் பேசி வந்திருந்தார்கள். டி.பி.சந்திரசேகரன் என்ற மார்க்சிஸ்ட் பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதில் மாவட்ட அளவிலான மார்க்சிஸ்ட் தலைவர்கள் சம்பந்தபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்திரசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பகிரங்கமாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்டுகளின் மாநிலத் தலைமையில் ரத்தம் தோய்ந்த புள்ளிகள் இடம் பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. தங்கள் கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காக வன்முறையிலும் இறங்கத் தயங்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு கண்ணூரில் அதிகரிப்பது ஜனநாயக கட்டமைப்புக்கு உலை வைக்கும் என்பது உறுதி.

-பிரதிப் கிருஷ்ணன் 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...