டெல்லியில் முக்கிய பணிகளில் கவர்னருக்கே முழு அதிகாரம்

 டெல்லியில் கவர்னர் நஜீப்ஜங்குக்கும், முதல்– அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தை நடத்தும் உத்தரவுகளை பிறப்பிப்பது யார் என்பதில் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல்வெடித்துள்ளது.

சமீபத்தில் டெல்லி தலைமைசெயலாளர் சர்மா 2 வாரகால விடுப்பில் அமெரிக்கா சென்றதால், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சகுந்தலா கேம்லினை, தலைமை செயலாளர் பொறுப்பில் கவர்னர் நியமித்தார். இதற்கு முதல்– மந்திரி கெஜ்ரிவால் கடும் எதிர்ப்புதெரிவித்தார்.

தலைமை செயலாளரை நியமனம்செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று கூறிய அவர், சகுந்தலா கேம்லினை பதவி நீக்கம்செய்து அறிவித்தார். அதுமட்டுமின்றி சகுந்தலா நியமன உத்தரவில் கையெழுத்திட்ட டெல்லி மாநில அரசின் முதன்மை செயலாளரையும் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

அவர்கள் இருவரையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைத்துப் பேசினார். என்றாலும் ''யாருக்கு அதிகாரம் உள்ளது?'' என்பதில் சுமூக தீர்வு ஏற்பட வில்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தமது ஒப்புதல் இல்லாமல் டெல்லி அரசுபிறப்பித்த அனைத்து உயர் அதிகாரிகள் பணியிடமாற்றல், நியமன உத்தரவுகளை கவர்னர் நஜீப்ஜங் கடந்த புதன் கிழமை அதிரடியாக வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில் அவர், ''டெல்லியில் சுதந்திரமாக ஆட்சிநடத்த ஒத்துழைப்பு தாருங்கள்'' என்று கூறியிருந்தார். ஆனால் பிரதமர் மோடி அந்த கடிதம் பற்றி கண்டு கொள்ளவில்லை.

மேலும் கெஜ்ரிவால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், தனக்கு அதிகாரம் இல்லை என்று கெஜ்ரிவால் மக்களை திசைதிருப்புவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

இந்நிலையில் யூனியன் பிரதேச அரசில் கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்–மந்திரிக்கு அதிகாரம் உள்ளதா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே முக்கிய பணிகளில் கவர்னருக்கே முழு அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் நியமனம், பொது உத்தரவு, போலீஸ் மற்றும் நிலம் மீது முடிவு எடுக்கும் பொறுப்பும், அதிகாரமும் கவர்னருக்கே உள்ளது.

அதிகாரிகளை நியமனம் செய்யும்போது, அது தொடர்பாக கவர்னர், முதல்– மந்திரியுடன் ஆலோசனை நடத்தவேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. தேவைப்பட்டால் முதல்– மந்திரியிடம் கவர்னர் கருத்துகேட்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விளக்கம் அரசிதழிலும் உடனடியாக வெளியிடப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...