அரசை யாரும் நிர்பந்திக்க முடியாது

 லலித் மோடிக்கு விசாபெற உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அகியோர் பதவி வில வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க் கட்சியினர் வலியுறுத்தியபோது, அதற்கு வாய்ப்பேயில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது பிரதமர் கூட்டத்தை சுமுகமாக நடத்தவிரும்புகிறேன். எல்லா பிரச்சினை களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், "பிரதமர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த விரும்பினார் என்றால் சுஷ்மா ஸ்வராஜையும், வசுந்தரா ராஜேவையும் அவர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "அரசை யாரும் நிர்பந்திக்க முடியாது. ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரையும் நீக்கச்சொல்லி அரசை எவரும் உத்தரவிடமுடியாது. மத்திய அரசைப் பொருத்தவரை அமைச்சரவையில் உள்ள எந்தஒரு அமைச்சரும் தவறிழைக்கவில்லை" என்றார்.

நிலச்சட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப் படாததால் அரசு தரப்பிலும் சில விஷயங்களில் சமரசம்செய்ய வேண்டும் என ராம் கோபால் யாதவ் தெரிவித்ததை தான் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...