இந்தியாவில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாட பிரதமர் முடிவுசெய்துள்ளார். இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருவதால் பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அறிவிக்க ப்படும்.
ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. சிலநாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி பள்ளி மாணவர்களிடம் நேரடியாகபேச பிரதமர் முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.