தமிழக உப்புகளின் தரத்தை உயர்த்த மாதிரி உப்பு பண்ணை

 விழுப்புரம் மாவட்டம் மரக் காணத்தில் மாதிரி உப்பு பண்ணையை மத்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம் ஆகிய நகரங்களுக்கு இடங்களுக்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டம் மரக் காணத்தில்தான் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதையொட்டி தமிழகத்தில் தயாரிக்கப்படும் உப்புகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே மூன்றாவது இடமாக மரக் காணத்தில் 35 லட்ச ரூபாய் செலவில் மாதிரி உப்புபண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உப்பு பண்ணையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் தயாரிக்கப்படும் உப்புகள் தரம்குறைந்து உள்ளதாகவும், அதனை தரம் உயர்த்தவும் உப்புதொழில் செய்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கிலும் இந்த மாதிரி உப்பு பண்ணையை துவக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சிறு, குறுதொழில் செய்பவர்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு முத்ராவங்கி திட்டத்தை பிரதமர் துவங்கி வைக்க உள்ளார் , இதன் மூலம் பிணையம் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...