தனித்து முடிவெடுப்பதில் வல்லவர் மோடி

 பிரதமர் மோடியின் தகுதிக்கு முன்பு, குடும்ப அரசியல் எல்லாம் எடுபடாது. அவர் தலைமை பண்புக்கு ரோல்மாடலாக இருக்கிறார். அவரை வெற்றிகொள்ள முடியாது. அவர் விரைந்து கற்கும் திறன் படைத்தவர். தினமும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்கிறார். அவருடைய மிகப்பெரிய பலமே சிறந்த தகவல் தொடர்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும்

இருப்பதுதான். இவை எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு புகழையும் செல்வாக்கையும் உருவாக்கி உள்ளது. அவருடைய பர்சனா லிட்டி அனைவரையும் வியக்க வைக்கிறது.

மோடியின் வெற்றிகளை பார்த்து குடும்ப அரசியலில் உள்ளவர்கள் அவரை குறி வைத்து அரசியல் நடத்துகின்றனர். ஆனால், அதில் வெற்றி பெற முடியாது. கடந்த சில ஆண்டுகளாக மோடிக்கு போராட்டங்களாக இருந்தன. ஆனால், அந்த கால கட்டத்தில் அவர் நிறைய கற்றுக் கொண்டார். தனித்து முடிவெடுப்பதில் வல்லவர். ஒரு முறை முடிவெடுத்து விட்டால், அதை செயல்படுத்தும் வரை வேகமாக செயல்படுபவர். எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.

வழக்கமாக அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் மூலம் தான் மக்களுடன் தொடர்புவைத்து கொள்வார்கள். மோடி அப்படி இல்லை. மக்களுடன் நேரடியாக தொடர்புவைத்து கொள்கிறார். அதனால் தான் ஊடகங்கள் செய்திகளை திரித்து வெளியிடும்போது, உடனடியாக மக்களிடம் நேரடியாக பேசி பதிலடி கொடுக்கிறார். ஊடகங்களின் விமர்சனங்களை கையாள்வதில் மோடிக்கு எந்தசிரமமும் இருந்ததில்லை.

குஜராத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மோடிக்கு எதிராக ஊடகங்கள் தீவிரபிரச்சாரம் செய்தன. ஆனால், மோடி மக்களை நேரடியாக சந்தித்து வெற்றியும்பெற்றார். பிரதமர் மோடியின் வெற்றி உண்மையில் நம்மை மலைக்கவைக்கிறது. அதிசயிக்க வைக்கிறது. தெளிவான சிந்தனை உள்ளவர் மோடி. அதன்மூலம் நாட்டை சிறந்தமுறையில் வழிநடத்தி செல்கிறார். நிர்வாகத்தில் அவருடைய உத்தரவுகள், திட்டங்களை செயல்படுத்தும் முறை, முன்னின்று வழி நடத்திச் செல்லும் திறன், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இருந்து பணிகளை தாமேபெற்று அவற்றை நிறைவேற்றி வைப்பது, சோர்வு அடையாமல் உள்ள அவரது உடல்பலம்.. இவை எல்லாம் சேர்ந்துதான் நமக்கு ரோல்மாடல் தலைவராக இருக்கிறார்.

‘தாருண் பாரத்’ என்ற நாளிதழில் பிரதமர் மோடியை புகழ்ந்து அருண் ஜேட்லி எழுதியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...