நாட்டின் உயர்ந்த பீடத்தை அடைந்த பெருமைக்குரியவர்

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு உள்ளூர் தொடங்கி உலகத்தலைவர்கள் வரை வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

எளியகுடும்பத்தில் பிறந்துவளர்ந்து அரசியலில் படிப்படியாக முன்னேறி நாட்டின் உயர்ந்த பீடத்தை அடைந்தபெருமைக்கு சொந்தக்காரர்.

வாஜ்பாய் ஆட்சிக்க்குபிறகு சரிவை சந்தித்துவந்த பாஜகவை பீனிக்ஸ் பறவையாக மாற்றி உயரபறக்க வைத்திருக்கும் அரசியல் வித்தகர்.

இன்று நாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, தனது சிறு வயதில் அம்மாவுக்கு உதவிக்கரமாக வீட்டுப் பணி செய்தவர். பள்ளிமுடிந்ததும் வாட் நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்திவந்த தேநீர் கடைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மோடி, அங்கு அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்வார். பருவவயதில் மோடியின் நண்பர்கள் பலரும் விளையாட்டு, கேலிகிண்டல் எனச் சுற்றித்திரிய இவர் மட்டும் குடும்ப பொறுப்பை தாங்கி நின்றார்.

பிரதமர் மோடியை பொறுத்தவரை தனது சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காரியத்தையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்புவர். சவால்களை ஏற்று அதை வெல்ல வேண்டும் என நினைப்பவர். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு போவது அவருக்கு பிடிக்காத ஒன்று என்பது அவரைநெருங்கி அறிந்தவர்கள் கூறியதகவல். அந்த வைராக்கியமும், லட்சியமும்தான் அரசியலில் கடும் எதிர்ப்புகளையும் மீறி அவரை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது.

தன்மீதான விமர்சனங்களை கண்டு எப்போதும் கலங்காதவர் மோடி. தனது நடை, உடை, பேச்சு, உள்ளிட்ட விவகாரங்களில் அதிககவனம் செலுத்தக்கூடியவர். எப்போதும் நேர்த்தியான ஆடை அணிந்து கம்பீரமாக காட்சியளிக்கவேண்டும் என நினைப்பவர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்துக் கொள்ளும் தலைவராக உலக அரங்கில் திகழ்பவர்.

பிரதமர் மோடியின் உரையை சற்று கூர்ந்து கவனித்தால் ஒன்று புரிய வரும். அவரது மேடைப் பேச்சுகள் எவ்வித பிசிறுமின்றி சொல்ல வரும் கருத்தை வெகுஜன மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நயமாக எடுத்துரைப்பதை காண முடியும். அதேபோல் ஒருவரை பார்த்து பேசிய சில நிமிடங்களில் அவரது குணாதிசயங்கள், திறமைகளை துல்லியமாக கணிக்கக்கூடிய ஆற்றல் பிரதமர் மோடிக்கு உள்ளதாக பத்திரிகையாளர் வினோத் கே.ஜோஸ் என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...