நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

 எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். மனதிற்கு நல்ல மகிழ்ச்சியுண்டாகும். நல்ல தேகபுஷ்டி உண்டாகும். நல்ல பலம் உண்டாகும். உடலில் நல்ல ஒளியுண்டாகும். வாலிபத் தன்மை என்றும் நிலைத்திருக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட நோய், செவி நோய், கபால அழல்நோய் காச நோய் மட்டுமன்றி உடல் புண்களும் குணமாகும்.

ஆண்களைப் பொறுத்தவரையில் சனியும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் செவ்வாயும் வெள்ளியும் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அதிகாலையில் எண்ணெய் தேய்த்து சூரிய உதயத்திற்கு முன்னால் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் உடனே குளிக்க கூடாது. குறைந்தது அரைமணி நேரமாவது பொறுத்துதான் குளிக்க வேண்டும்.

நல்லெண்ணெய் அவ்விதமே உபயோகிக்கக் கூடாது. காய்ச்சி ஆற வைத்துதான் குளிக்க வேடும். அதிலும் வெந்நீரில்தான் குளிக்க வேணும். சோப் உபயோகிக்கக்கூடாது. சீயக்காய்த்தூள் அல்லது அரைப்பு தேய்த்துதான் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெயை இருதயத்தை நோக்கித் தேக்க வேண்டும். இவ்விதம் தேய்த்து வந்தால் தோல் நல்ல பளபளப்புடன் காணப்படும். உடற்சூடு கண்டிப்பாகத் தணியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...