தமிழ்நாட்டின் அரசியலை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்

2024-ம் ஆண்டில் நடக்க விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாகட்சி சார்பாக 400 எம்.பி-க்கள் இருப்பார்கள். அவர்களில் 25 பேர் தமிழ் நாட்டிலிருந்து பாரதிய ஜனதா சார்பாக வென்ற வர்களாக இருப்பார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.

மோடி அரசின் எட்டு ஆண்டுச்சாதனையை விளக்கும் பொதுக் கூட்டம் நெல்லை மாவட்டம், செட்டிகுளம் பண்ணையூரில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அண்ணாமலை் பேசுகையில், “22 ஆண்டுக்கால அரசியல்வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முதல்வராகவும், எட்டு ஆண்டுகள் பிரதமராகவும் இருப்பவர்மோடி. இதுபோல் இந்தியாவில் வேறு யாரும் மக்களின் அமோகஆதரவுடனும், செல்வாக்குடனும் இருந்ததில்லை. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அதிகப்படுத்தி யிருப்பவர் மோடி.

2024-ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 400 எம்.பி-கள் வெற்றிபெற வேண்டும். அவர்களில் 25 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மோடி மூன்றாவதுமுறையாக ஆட்சி அமைப்பார். அந்த அமைச்சரவையில் கேபினட் அமைச் சர்களாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசியலை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நாம்இருக்கிறோம். தமிழ்நாட்டின் அரசியலை நமக்குப் பிடிக்கவில்லை. ஊழல்நிறைந்த அரசியலாக உள்ளது. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் கரன்ட்டிலும்கூட தி.மு.க-வினர் ஊழல் செய்கிறார்கள். ஊழல் பெருச்சாளிகளைக் கொண்டு தி.மு.க அரசு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு 45 கோடி நபர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கப் பட்டதுடன், 45 கோடி மக்களின் ஜன்தன்கணக்கில் 22 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்தியில் எட்டு ஆண்டுகள் எந்தப்பிரச்னையும் இல்லாமல் அமைச்சரவை சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த எட்டு ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சியில் ஓர்அமைச்சர் ஊழல் செய்தார் என்று சொல்லமுடியாத அளவுக்கு மோடி நேர்மையாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த 400 ஆண்டுகளில் இந்தியா இழந்ததை பிரதமர் மோடி எட்டு ஆண்டுகளில் திரும்பப்பெற்றுக் கொடுத்துள்ளார். வரும் காலங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வேலைதேடி வருவார்கள். அந்த அளவுக்கு அறவழியில் மத்தியில் ஆட்சி நடக்கிறது” என்று பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...