கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சென்றடைந்தார்

 3 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்ற டைந்தார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு  ஆசியன் -இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.

மலேசிய தலை நகர் கோலாலம் பூருக்கு தனிவிமானம் மூலம் சென்றடைந்த பிரதமர் மோடியை, மலேசியாவுக்கான இந்திய தூதர் டிஎச் திரு மூர்த்தி வரவேற்றார். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மிகப் பெரும் விளம்பர பலகைகள் கோலலம்பூர் நகர்முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளூர்மக்களும் புலம்பெயர்ந்த இந்தியர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

மோடி தங்கியுள்ள ரெனிஸ்ஸன்ஸ் ஓட்டல்வளாகத்தில் மோடியை சந்திக்க  இந்திய வம்சாவளியினர்  காத்திருக்கின்றனர். பிரதமர் ஓட்டலை விட்டு வெளியே றுகையில், அவரைபார்க்க ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் குழுமியிருந்தனர்.

கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் நாளை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதேபோல், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியிலும் நாளை உரையாற்றவுள்ளார். மலேசிய நாட்டு பிரதமர் நஜீப்ரசாக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது பாதுகாப்பு, ராணுவம் ஆகியதுறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பல்வேறு புரிந் துணர்வு ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பின்போது கையெழுத்தாக உள்ளன.

இதனிடையே மலேசியாவில் நடைபெறும் 13வது ஆசியான் மாநாட்டை சீர்குலைப் பதற்காக, அங்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கூறபடுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் மலேசியா வந்துள்ளதால் அங்கு  தீவிரவாதிகள்  தாக்குதல்நடத்த அதிகவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மலேசியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...