மீண்டும் தலைவரானார் அமித்ஷா-

இந்தியாவிலேயே ஒரு கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் இயங்குகிறது என்றால் அது பிஜேபி தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.1980 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி ஆரம்பிக்கபட்ட கட்சிக்கு இன்று வரை பத்து தலைவர்கள் இருந்துள்ளார்கள். தலைவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களின் பதவிக்காலம் அதிகரிக்கபட்டுள்ளது.

மூன்று வருடம் கொண்ட பிஜேபியின் தேசியதலைவர் பதவியை 2014ம் ஆண்டு மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவரு க்கு ஒரு பதவி என்ற கொள்கையால் அன்றைய பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருந்து வெளியேற நாடாளு மன்ற தேர்தலில் பிஜேபியின் வெற்றிக்கு களம் வகுத்த அமித்ஷா
தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

தன்னுடைய முதல் பதவிகாலம் மூன்று ஆண்டுகளாக இல்லாத நிலையில் பதவிஏற்ற அமித்ஷா இரண்டாவதாக இன்று மீண்டும் தேர்வாகி உள்ளார். நிர்வாகத் திறமையிலும், களவியூகம் வகுப்ப திலும் வல்லவர் என்றறியப்படும் .அமித்ஷா அவர்களின் சாத னைக்கு ஒரு சின்ன உதாரணம்.இதோ..உத்தர பிரதேசத்தில் 2009 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த இடங்கள் பத்துதான். ஆனால் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பா ளராக 2013ம் ஆண்டில் அமித்ஷா பொறுபேற்ற பிறகு 2014 ல் நடந்த பொது தேர்தலில் பிஜேபிக்கு மட்டும் கிடைத்த தொகுதிகள் 71 தொகுதிகள்.மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பிஜேபி கூட்ட ணி 73 தொகுதிகளை கைப்பற்றியது.

அக்டோபர் 22, 1964ல் மும்பையில் குஜராத்தி வியாபாரஜெயின் குடும்பத்தில் பிறந்த அமித்ஷா தன்னுடைய 14 வயது வயதிலே யே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தவர், கல்லூரியில் உயிர் வேதியியல் மாணவரான அவருக்கு, 1982ல் அஹமதாபாத் ABVP மாணவரமைப்பின் செயலாளராக தேர்வானார்.

அடுத்து தன்னுடைய கடுமையான உழைப்பால் குஜராத் மாநில பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவில் வேலை செய்து தேசிய அளவில் பொருளாளராக உயர்ந்தவர் பின்னர் மோடியுடன் இணைந்து குஜராத்தில் கிராமம் கிராமமாக பிஜேபியை வளர்த்து அகமதாபாத் நகர பிஜேபியின் செயலாளர் ஆனார். அடுத்து குஜராத்மாநில பிஜேபி துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி திவாலாக இருந்த பொழுது வங்கியின் சேர்மனாக பொறுப்பேற்று ரூ.20.28 கோடி நஷ்டத்தில் இருந்த. வங்கியை ஒரே ஆண்டில், கடன்களை அடைத்து, லாபம் ஈட்ட வைத்தார்.

1995ம் ஆண்டு, அமித்ஷா அவர்கள், சர்கெஜ் சட்டசபை தொகுதி உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அமித்ஷா ஒவ்வொரு முறையும் லட்சகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் எதிராளியை வீழ்த்துவதே இவரின்
குறிக்கோளாக இருக்கும். மோடியின் தலைமையில் குஜராத் மாநிலத்தில் உள்துறை மந்திரியாக பதவி வகித்து குஜராத் மாநிலத்தில் அமைதியை கொண்டு வந்தார்.

இன்று மீண்டும் தேசிய தலைவராக பொறுப்பேற்கும் அமித்ஷா மோடி பிரதமராக இருக்கும் 2019 வரை தலைவராக இருந்து கட்சியை சிறப்பாக வழி நடத்தி சென்று அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் பிஜேபிக்கு வெற்றி தேடி தருவார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...