மீண்டும் தலைவரானார் அமித்ஷா-

இந்தியாவிலேயே ஒரு கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் இயங்குகிறது என்றால் அது பிஜேபி தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.1980 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி ஆரம்பிக்கபட்ட கட்சிக்கு இன்று வரை பத்து தலைவர்கள் இருந்துள்ளார்கள். தலைவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களின் பதவிக்காலம் அதிகரிக்கபட்டுள்ளது.

மூன்று வருடம் கொண்ட பிஜேபியின் தேசியதலைவர் பதவியை 2014ம் ஆண்டு மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவரு க்கு ஒரு பதவி என்ற கொள்கையால் அன்றைய பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருந்து வெளியேற நாடாளு மன்ற தேர்தலில் பிஜேபியின் வெற்றிக்கு களம் வகுத்த அமித்ஷா
தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

தன்னுடைய முதல் பதவிகாலம் மூன்று ஆண்டுகளாக இல்லாத நிலையில் பதவிஏற்ற அமித்ஷா இரண்டாவதாக இன்று மீண்டும் தேர்வாகி உள்ளார். நிர்வாகத் திறமையிலும், களவியூகம் வகுப்ப திலும் வல்லவர் என்றறியப்படும் .அமித்ஷா அவர்களின் சாத னைக்கு ஒரு சின்ன உதாரணம்.இதோ..உத்தர பிரதேசத்தில் 2009 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த இடங்கள் பத்துதான். ஆனால் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பா ளராக 2013ம் ஆண்டில் அமித்ஷா பொறுபேற்ற பிறகு 2014 ல் நடந்த பொது தேர்தலில் பிஜேபிக்கு மட்டும் கிடைத்த தொகுதிகள் 71 தொகுதிகள்.மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பிஜேபி கூட்ட ணி 73 தொகுதிகளை கைப்பற்றியது.

அக்டோபர் 22, 1964ல் மும்பையில் குஜராத்தி வியாபாரஜெயின் குடும்பத்தில் பிறந்த அமித்ஷா தன்னுடைய 14 வயது வயதிலே யே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தவர், கல்லூரியில் உயிர் வேதியியல் மாணவரான அவருக்கு, 1982ல் அஹமதாபாத் ABVP மாணவரமைப்பின் செயலாளராக தேர்வானார்.

அடுத்து தன்னுடைய கடுமையான உழைப்பால் குஜராத் மாநில பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவில் வேலை செய்து தேசிய அளவில் பொருளாளராக உயர்ந்தவர் பின்னர் மோடியுடன் இணைந்து குஜராத்தில் கிராமம் கிராமமாக பிஜேபியை வளர்த்து அகமதாபாத் நகர பிஜேபியின் செயலாளர் ஆனார். அடுத்து குஜராத்மாநில பிஜேபி துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி திவாலாக இருந்த பொழுது வங்கியின் சேர்மனாக பொறுப்பேற்று ரூ.20.28 கோடி நஷ்டத்தில் இருந்த. வங்கியை ஒரே ஆண்டில், கடன்களை அடைத்து, லாபம் ஈட்ட வைத்தார்.

1995ம் ஆண்டு, அமித்ஷா அவர்கள், சர்கெஜ் சட்டசபை தொகுதி உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அமித்ஷா ஒவ்வொரு முறையும் லட்சகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் எதிராளியை வீழ்த்துவதே இவரின்
குறிக்கோளாக இருக்கும். மோடியின் தலைமையில் குஜராத் மாநிலத்தில் உள்துறை மந்திரியாக பதவி வகித்து குஜராத் மாநிலத்தில் அமைதியை கொண்டு வந்தார்.

இன்று மீண்டும் தேசிய தலைவராக பொறுப்பேற்கும் அமித்ஷா மோடி பிரதமராக இருக்கும் 2019 வரை தலைவராக இருந்து கட்சியை சிறப்பாக வழி நடத்தி சென்று அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் பிஜேபிக்கு வெற்றி தேடி தருவார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...