சீனாவை கண்காணிக்க களம் அமைத்த இந்தியா…

தென் சீன கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா முடிவுசெய்துள்ளது. அடடே ஆச்சரியமாக இருக்கே என்று நமக்கு வியப்பாக இருக்கும் ஏன்னா, வழக்கமா இந்தியாவைத்தான் மற்ற நாடுகள் கண்காணிக்கும். ஆனால் காலம் மாறி போச்சு. இந்தியா மற்ற நாடுகளை கண் காணிக்க ஆரம்பித்து விட்டது.. ஏன்னா, நடப்பது மோடி ஆட்சியல்லவா. எல்லாம் நடக்கத்தான் செய்யும். சீனாவையும் தென் சீனக்கடலையும் கண்காணிக்க முடிவு செய்த இந்தியா அதற்கு தேர்ந்தெடுத்த நாடு வியட்னாம்..இது தாங்க அரசியல்..

இந்திய பெருங்கடலில் சீனாவின் பட்டுப்பாதைக்கு செக் வைத்து இந்தியப் பெருங்கடல் நாடுகளான செசல்ஸ் மொரீஷியஸ் மற்றும் இலங்கை நாடுகளை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்த மோடி, சீனாவின் பிடிக்குள் சிக்கி விட்ட மாலத்தீவை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

அதே நேரத்தில் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள தென் சீன கடலின் மீதும் கண் வைத்த மோடி அங்குள்ள நாடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறார்.

உலகில் கடல் வழி போக்குவரத்தின் மூலம் நடைபெறும் வியாபாரத்தில் கிட்டதட்ட பாதியளவு இந்த தென் சீன பெருங்கடலின் வழியாகவே நடந்து வருகிறது.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதிகளவில் இருக்கும் இந்த ஏரியா முழுவதும் சீனா விற்க்கே சொந்தம் என்று தொடை தட்டி வருகிறது.

சீனா,தைவான், பிலிப்பைன்ஸ் மலேசியா, புருணை, இந்தோனே சியா, சிங்கப்பூர்,வியட்நாம்.மக்காவு மற்றும் கொங்கொ ங் ஆகிய நாடுகளை கொண்டுள்ள இந்த தென் சீன கடல் பசிபிக்
பெருங்கடலோடு சேர்ந்தது.இந்த கடல் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் நாடான வியட்னாமிற்கும் சீனாவிற்கும் பங்காளி சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையை இந்தியா பயன்படுத்தி கொள்ள முன் வந்துள்ளது.

நாற்பது வருடங்களுக்கு முன்பு உலக வல்லரசான அமெரிக்காவையே கொரில்லா போர் மூலம் துரத்தியடித்து உலக வரலாற்றில் தனி இடத்தை தக்க வைத்துள்ள வியட்னாமில் நின்று கொண்டு சீனாவை இந்தியா வேவு பார்க்க உள்ளது..

நல்லா இருக்குல்ல…40 வருசத்திற்கு முன் அமெரிக்காவை விரட்டியடிக்க எந்த நாடு சிந்தாந்த ரீதியாக துணை நின்றதோ
அந்த நாடான சீனாவை வேவு பார்க்க இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் வியட்னாமில் உள்ள கோ சி மிங் நகரத்தில் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையம் ஒன்றை நிறுவ உள்ளது.

மேற்கு வியட்னாமில் அமையவுள்ள இந்த அதிநவீன செயற்கை க்கோள் தொடர்பு மற்றும் இமேஜிங் மையத்தின் மூலம்
இந்தியா அனுப்பியுள்ள செயற்கைக்கோள்கள் வழியாக சீனா, தென் சீன கடல் பகுதிகள் உட்பட தெற்காசிய நாடுகளின் நகர்வுகளை இந்த மையத்தின் மூலமாக மிகத்துல்லியமாக பெற்று கண்காணிக்க முடியும்.

வியட்னாமை அடுத்து இந்தோனேசியாவிலும் இதே மாதிரி செயற்கை கோள் கண்காணிப்பு மையத்தை அமைக்க உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...