பிரம்மபுத்திராவில் சீனா அணை கட்ட முயற்சி: இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது – ராஜ்நாத் சிங்

திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து அரசு எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. திபெத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட அணை கட்டும் திட்டத்தால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது’ என, சீனா விளக்கமளித்துள்ளது.

இது குறித்து உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: முன்பு, சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது, உலக நாடுகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இப்போது இந்தியா பேசும்போது, உன்னிப்பாக கவனிக்கிறது. இந்தியா இன்று ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேறி வருகிறது. முன்பு பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது.

இப்போது இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வரும் இரண்டரை ஆண்டுகளில், முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்.

அரசியல் ஆதாயங்களைக் காட்டிலும் மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றி தான், பா. ஜ., அரசு அதிக அக்கறை காட்டுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் மிக அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...