பிரம்மபுத்திராவில் சீனா அணை கட்ட முயற்சி: இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது – ராஜ்நாத் சிங்

திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து அரசு எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. திபெத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட அணை கட்டும் திட்டத்தால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது’ என, சீனா விளக்கமளித்துள்ளது.

இது குறித்து உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: முன்பு, சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது, உலக நாடுகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இப்போது இந்தியா பேசும்போது, உன்னிப்பாக கவனிக்கிறது. இந்தியா இன்று ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேறி வருகிறது. முன்பு பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது.

இப்போது இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வரும் இரண்டரை ஆண்டுகளில், முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்.

அரசியல் ஆதாயங்களைக் காட்டிலும் மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றி தான், பா. ஜ., அரசு அதிக அக்கறை காட்டுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் மிக அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...