பிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கேரளாவில் இருந்து தனிவிமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை வரும் பிரதமர் சிங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ. மருத்துவ கல்லூரியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, கொடிசியா மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரி சவுத்ரி தலைமையில் 4 அதிகாரிகள் நேற்று கோவைவந்தனர். அவர்கள் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தனர்.

பொதுக்கூட்ட மைதானம் நேற்று முதலே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு ‘சீல்’ வைக்கப் பட்டது. அங்கு செல்ல யாரையும் அனுமதிக்க வில்லை. இதுபோல, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. கோவை, சேலம், திருப்பூர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த பகுதிகளில் பாதுகாப்புபணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரிகள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்து கின்றனர்.

இதில் திறப்புவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் பிரதமர் வந்துசெல்லும் இடங்களில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆதரவளிக்கும் பிரதமரின் விஸ்வக ...

ஆதரவளிக்கும்  பிரதமரின் விஸ்வகர்மா திட்டங்கள் உதயம் பதிவு தளம், உதயம் உதவித் தளம் ஆகியவற்றில் ...

அனைவரும் இணைவோம் அனைவரும் உயர் ...

அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை ...

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...