பிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கேரளாவில் இருந்து தனிவிமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை வரும் பிரதமர் சிங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ. மருத்துவ கல்லூரியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, கொடிசியா மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரி சவுத்ரி தலைமையில் 4 அதிகாரிகள் நேற்று கோவைவந்தனர். அவர்கள் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தனர்.

பொதுக்கூட்ட மைதானம் நேற்று முதலே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு ‘சீல்’ வைக்கப் பட்டது. அங்கு செல்ல யாரையும் அனுமதிக்க வில்லை. இதுபோல, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. கோவை, சேலம், திருப்பூர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த பகுதிகளில் பாதுகாப்புபணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரிகள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்து கின்றனர்.

இதில் திறப்புவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் பிரதமர் வந்துசெல்லும் இடங்களில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...