கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட, 2,000 பேரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா, சமீபத்தில் மரணம் அடைந்தார்.
அவரது இறுதி ஊர்வலத்துக்கு, போலீசார் அனுமதி அளித்ததை கண்டித்து, பா.ஜ., மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில், நேற்று மாலை கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில், கண்டன பேரணி நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். காந்திபுரம், கிராஸ்கட் சாலை வழியாக சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் வழியே செல்ல திட்டமிட்டிருந்தனர்.
வி.கே.கே.மேனன் சாலையிலிருந்து பேரணி துவங்கி, காந்திபுரம் சிக்னலை கடக்க முயன்ற போது, தடையை மீறி பேரணி நடத்தியதாக, பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |