அன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி

சாத்வீகமும், சத்ரியமுமாய் இரு துவருவங்களும் விடுதலை போர்க்களத்தில் அன்னியரை எதிர்த்து நின்றிருந்தன.அன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி அதற்கு தளபதியதியாய் இருந்தார். அவர் ஏற்று கொண்ட பொறுப்பு சாதாரணமானது அல்ல. துணைக்கு அவர் அழைத்துக் கொண்ட கூட்டாளிகளும் மிக சாதாரணமாவர்கள் அல்லர். போர் வெறியும்

அடங்காத முரட்டு சுபாவமும் கொண்டவர்கள் ஐப்பான் ராணுவத்தினர். அவர்களை தம் வசம் வைத்துக் கொள்வது மிகுந்த சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே முடியும் நேதாஜிக்கு அந்த திறன் இருந்தது.

காந்தி நேதாஜியை பற்றி "அவசரக்காரர், ஆத்திரக்காரர்" என்றும் நேரு அவரை படபடப்பானவர், பண்படாதவர்" என்றும் கூறினார்கள். ஆனால் ஸ்தாபன காங்கிரஸின் சரித்திரம் இருவரையும் வென்று எடுத்தவர் நேதாஜி என்று பதிவு செய்துள்ளது.
நேதாஜி சுதந்திர பாரதம் என்ற நிழல் அரசாங்கத்தை 1944-ல் ஏற்படுத்தினார். அசாத் இந்தியா என்ற பெயரில் கரண்சி நோட்டுகளும் புழக்கத்தில் விட்டார்.

ஒருபுறம் பாரதம் விடுதலை அடைய வேண்டும் அதற்காக அன்னியர்கள் வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பரவியது. ஆனால் நேதாஜி தேசம் விடுதலை அடைந்து விட்டது. அன்னியர்கள் வெளியேறுவதுதான் பாக்கி என்றார்.

ஜனவரி 23-ந் தேதி நேதாஜியின் பிறந்த நாள் அதுபோல் அவருக்கு வழி காட்டியாய் திகழ்ந்த ராஷ் பிகாரி நினைவு நாள் ஜனவரி 17-ந் தேதி வருகிறது.

16 வயதில் துறவியாக வேண்டுமென்று வெளியேறிய நேதாஜி 41-வது வயதில் காங்கிரஸின் தலைமை பதவி வரை உயர்ந்து அவர். 44-வது வயதில் ஜெர்மனி, ஜப்பான், கிழக்காசிய நாடுகளில் உள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்து பின்னர் இந்திய ராணுவத்தை அமைத்தார். அதில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த பெருமை உள்ளது.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றில் அவரது இறந்த தேதி குறிப்பிடபடவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...