வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி

”நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் வளர்ந்த நாடாக உருவெடுப் போம்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடந்த வளர்ந்த பாரதத்தின் இளம் தலைவர்களின் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

நாம் வளர்ந்த பாரதமாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கு சிலருக்கு கடினமானதாக தெரிய லாம்; ஆனால், அது சாத்தியமற்றது அல்ல.

நம் இளம் தலைமுறையின் எண்ணிக்கையையும், பலத்தையும் வைத்து பார்க்கும்போது, நம் நாடு வளர்ந்த பாரதமாக உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

ஒரு நாடு முன்னேற, பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அதை தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பை, 2030க்குள் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே நாம் அதை அடைந்து விடுவோம். அரசால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

இளைஞர்களும் அதில் பங்களிக்க வேண்டும். ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கு, மோடிக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இளைஞர்களும் அதில் பங்கேற்க வேண்டும். லட்சிய இலக்குகளை அடைவதற்கு, தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் தீவிர பங்கேற்பும், கூட்டு முயற்சியும் தேவை.

வரும் 2047 வரையிலான அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம்.

இந்த கால கட்டத்தில் வளர்ந்த பாரதம் என்ற கனவை, நம் இளைய தலைமுறையினர் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

‘எல்லா பிரச்னைகளுக்கும் இளைஞர்களிடம் தீர்வு இருக்கும்’ என, சுவாமி விவேகானந்தர் நம்பினார். அந்த கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...