இந்திய ராணுவத்தில் புதியமுறையில் ஆள் சேர்க்கும்விதமாக, `அக்னிபத்’ எனும் திட்டத்தைக் கடந்த செவ்வாயன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகப் படுத்தியிருந்தார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியிருந்தது.
இதுவொருபுறமிருக்க, அக்னிபத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம், பெரும் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில், பீகார், தெலங்கானா மாநில ரயில் நிலையங்களில், ரயில்களுக்குத் தீவைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தெலங்கானா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்தவேண்டாம் என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வே நமது தேசியசொத்து, அதற்கு எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு. அதுமட்டுமல்லாமல் ரயில்வே, உங்களுடைய சேவைக ளுக்காக மட்டுமே. எனவே வன்முறையில் யாரும் ஈடுபடவேண்டாம்’’ என்றும், “ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தவேண்டாம்’’ என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |