வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிற நிதி எப்படி செலவிடப் படுகிறது என்பதை அறியும் உரிமை நாட்டுக்குண்டு

மத்தியில் உள்ள பாஜக  அரசை சீர்குலைக்க சதி நடக்கிறது . சமீப காலமாக என் மீது தொடர்தாக்குதல்கள் நடத்தப்படுவதை நீங்கள் காணலாம். சிலர் தொடர்ந்து தாக்கு தல்களில் ஈடுபட்டு வருகின்றனர். டீவிற்றவர் எப்படி பிரதமர் ஆனார் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடிய வில்லை .

நான் எடுத்த சில நடவடிக் கைகளால் இவர்கள் எல்லோரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பணம்வருகிறது. எனது அரசு அதற்கு கணக்கு கேட்கிறது. நிதிவரட்டும். ஆனால் பெற்ற நிதிக்கு கணக்கு சொல்லுங்கள் என்கிறோம். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். எனக்கு எதிராக அவர்கள் கோஷம்போடுகிறார்கள்.

மோடியை எப்படி முடிக்கலாம், மோடியின் அரசை எப்படி அகற்றலாம், மோடி புகழை எப்படி சீர்குலைக்கலாம் என எப்போதும் சதி செய்துவருகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிற நிதி எப்படி செலவிடப் படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டுக்குண்டு. இது சட்டத்தில் உள்ளது.

என் அருமை சகோதரர்களே, சகோதரிகளே, இந்த பிணியில் (ஊழல்) இருந்து நாட்டை விடுவிக்கத்தான் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு எதிராக என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு போகட்டும். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பில் இருந்து நான் விலகிச் செல்லப்போவதில்லை. நான் அதை நிறுத்த மாட்டேன். நான் தளர்ந்துபோகவும் மாட்டேன். அதற்கெல்லாம் அடிபணியும் கேள்விக்கே இடமில்லை.

எனக்கு எதிராக தூற்று கிறவர்களுக்கு எது உறுத்துகிறது, எது பாதிப்பை ஏற்படுத் துகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், நாட்டை கொள்ளையடிப்பதை, அழிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநிலம், பர்காரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...