வடமாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா வுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

குஜராத் கடல்பகுதியில் இருந்த மர்ம படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதில் வந்த தீவிரவாதிகள் குஜராத்துக்குள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர் குஜராத் எல்லை வழியாக ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தீவிரவாதிகள் டெல்லியிலோ அல்லது சிவராத்திரியை முன்னிட்டு சிவன்கோயில்களிலோ தாக்குதல் நடத்தலாம் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 120 கமாண்டோ குழுவினர் குஜராத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். முன் எப்போதும் இல்லா வகையில் குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவராத்திரி கொண்டாடப் படுவதால் சிவன் கோயில்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் உயர் நிலைக்குழு கூட்டத்தைக்கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதுபோல, டெல்லி முழுவதும் உச்சகட்டபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேகப்படும்படியான நபர்களை கண் காணிக்குமாறு அனைத்து துணை ஆணையர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. தீவிரவாத தாக்குதலை தடுத்துநிறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தகூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தாக்குதலை எதிர்கொள்வதற்காக குஜராத்மாநிலத்தில் தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) 4 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் எடுத்துரைக்கபட்டது. தேவைப்பட்டால் வேறு பகுதிகளுக்கும் செல்ல அவர்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், மாநகரங்கள், வழிபாட்டுதலங்கள், தொழிற்சாலை பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...