சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை

மக்களின் பிரச்னைகளை தீர்க்கமுடியாத சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை என்று உத்தர பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியை மறை முகமாக தாக்கிப் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச தலைநகர் லக்னொவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ''அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின்பங்காக வழங்கப்பட்டு வந்த நிதியை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக பிரதமர் நரேந்திரமோடி உயர்த்தி உள்ளார்.

இந்த மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவது தவறானதாகும். நானும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பதவி வகித்திருக்கிறேன். இந்த மாநிலத்தின் அரசு கரூவூலம் குபேரனிடம் இருக்கும் நிதியைப் போன்றது என்பது எனக்கு தெரியும்.

மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, மக்களை முட்டாள்களாக்க ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர். மேலும், மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாத ஒரு மாநில அரசுக்கு (உத்தரப் பிரதேசம்) தார்மிக அடிப்படையில் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் தகுதி இல்லை" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...