சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை

மக்களின் பிரச்னைகளை தீர்க்கமுடியாத சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை என்று உத்தர பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியை மறை முகமாக தாக்கிப் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச தலைநகர் லக்னொவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ''அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின்பங்காக வழங்கப்பட்டு வந்த நிதியை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக பிரதமர் நரேந்திரமோடி உயர்த்தி உள்ளார்.

இந்த மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவது தவறானதாகும். நானும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பதவி வகித்திருக்கிறேன். இந்த மாநிலத்தின் அரசு கரூவூலம் குபேரனிடம் இருக்கும் நிதியைப் போன்றது என்பது எனக்கு தெரியும்.

மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, மக்களை முட்டாள்களாக்க ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர். மேலும், மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாத ஒரு மாநில அரசுக்கு (உத்தரப் பிரதேசம்) தார்மிக அடிப்படையில் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் தகுதி இல்லை" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...