முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்டுங்கள்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சிறந்த நடிகர் என்று லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கிண்டலாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிகார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

பிகார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் நிதீஷ்குமார் தடுப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்தனர். ஆனால், மாநிலத்தில் கொலை, கொள்ளை அதிகரித்ததுடன் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லா சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அடுத்த மக்களவை தேர்தலில் நிதீஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த போவதாக ஜனதா கட்சிகள் தெரிவித்துள்ளன. முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்ட அவர் முயற்சிக்கட்டும். அதன்பிறகு தேசிய அளவிலான அவரது லட்சியத்தை முன்னெடுக்கலாம்.

பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என நிதீஷ் கூறிவருகிறார். சுமார் 17 ஆண்டுகளாக பாஜக.,வுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனும் கூட்டணி வைத்திருந்த போது இந்த ஞானோதயம் அவருக்கு வரவில்லையா?

நிதீஷின் இத்தகைய தேர்ந்தநடிப்பை அனைவரும் பாராட்ட வேண்டும். பிகாரில் மதுவிலக்கை தற்போது அமல்படுத்தியுள்ள அவர், இதற்குமுன்னர் பல ஆண்டு காலமாக தெருவுக்குத்தெரு மதுக்கடைகளைத் திறக்க வழிவகுத்தவர் என்பதை மறக்கக்கூடாது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...