2024 மக்களவைத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் மோடி

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்நிறுத்தப்படுவார். என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’’ என்று தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றபட்டது.

இதில் கலந்துகொண்ட பாஜக தேசியதலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது டெல்லியில் நடைபெற்ற பாஜக உயர்நிலை கூட்டத்தில் முக்கியமுடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்த அலுவலகம் அமைக்க திட்டமிடபட்டது.

இதற்காக 750 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் 250 மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கபட்டுள்ளன. 512 மாவட்டங்களில் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது பிஹாரில் 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் புதிய அலுவலகம்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

பாஜகவின் கொள்கைகள் வலுவானவை. இதன்காரணமாக மாற்று கட்சிகளிடம் இருந்து பாஜகவில் இணைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...