மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் வன்முறை களமாக காட்சியளித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மே.வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரியும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது.
இச்சம்பவத்திற்கு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குவங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி, ”மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |