மிரட்டல்கள் மூலம் என் பணிகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்

தமிழ் மாநில பிஜேபி தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
.
அவருடைய வேட்புமனுவை வாபஸ் வாங்கா விட்டால் கார் மீது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மிரட்டல் வந்துள்ளது. சென்னை விருகம் பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிஜேபி சார்பில் அக்கட்சியின் தமிழகதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடுகிறார். அவர் மிக தீவிரமாக  தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார்.  மக்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கார் மீது லாரி ஏற்றிக் கொன்று விடுவோம் என குறுஞ்செய்தி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விடுத்த இந்தகொலை மிரட்டல் குறித்து, நான் கவலைப்பட வில்லை. இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் என் பணிகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்.மிரட்டலைகண்டு அஞ்ச மாட்டேன். அவற்றையெல்லாம் மீறி தான் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுவருகிறேன். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் தமிழையும் கொலைசெய்து இருக்கிறார்கள்.


தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் எனக்கு சந்தேகம் இல்லை. கொலை மிரட்டலை தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு கேட்கமாட்டேன். கொலைமிரட்டல் விடுத்தவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தலைவர்கள் மீதான பாதுகாப்பில் தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்படவேண்டும் என்று அவர் கூறினார்.

மிரட்டல்குறித்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று  மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...