தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்தஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இருமாநில பொறுப்புகளை ஒருசேர கவனித்து வரும் தமிழிசை இருமாநிலங்களிலும் குடியரசுதின விழாலும் தேசிய கொடியை ஏற்றுவார் என்ற தகவல் வலம்வந்தது.
மேலும், இரண்டு மாநிலங்களிலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, புதுச்சேரியில் முதல்மந்திரி ரங்கசாமி தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி நராயணசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், தெலுங்கானாவில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு விமானம் மூலம் புதுச்சேரிக்குவந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கடற்கரைசாலை காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு விருதுகளையும் வழங்குகினார். விழாவில் முதல்-மந்திரி ரங்கசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |