மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை

மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல என்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற வாக்குப்பதிவின் போது காலை மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் அகற்றகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,பாஜக பிரமுகர் வெளியேற்றப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளதோடு,அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம்,இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பாஜகவின் முன்னாள்மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லவிழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:”மேலூரில் பாஜக முகவர்செய்ததில் எந்த தவறும் இல்லை.ஏனெனில்,ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப்போல வரவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.இதில் என்னதவறு இருக்கிறது?.

எந்த ஒருநபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்வார்களா?.பாஜக முகவர் தன்னுடைய கடமையைதான் செய்திருக்கிறார்”,என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...