மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை

மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல என்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற வாக்குப்பதிவின் போது காலை மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் அகற்றகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,பாஜக பிரமுகர் வெளியேற்றப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளதோடு,அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம்,இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பாஜகவின் முன்னாள்மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லவிழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:”மேலூரில் பாஜக முகவர்செய்ததில் எந்த தவறும் இல்லை.ஏனெனில்,ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப்போல வரவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.இதில் என்னதவறு இருக்கிறது?.

எந்த ஒருநபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்வார்களா?.பாஜக முகவர் தன்னுடைய கடமையைதான் செய்திருக்கிறார்”,என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...