செல்போன் டவர் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது

செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையின் கேள்வி நேரத்தின்போது செல்போன் டவரில் ஏற்படும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதில்அளித்த மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செல்போன் டவரில் ஏற்படும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது என்பது வதந்தியே என்றும், அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத இந்த வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நம் நாட்டில் உள்ள 6 உயர் நீதிமன்றங்கள் செல்போன் டவரில் ஏற்படும் கதிர் வீச்சால் எந்த பாதிப்பும் இல்லை என்று தீரப்பு வழங்கியுள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் சுட்டிக் காட்டினார். மேலும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதிலும் ஆதாரமில்லை என்று அவர் தெரிவித்தார். உலகசுகாதார நிறுவனமும் நீண்ட ஆராய்ச்சிக்கு பின், மொபைல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...