நியூஸ்7 கேள்விநேரம்- கேலி நேரம் ஆகலாமா–?

நேற்று 11.06 16 இரவு 9-10 மணி நியூஸ்7 தொலை காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியில், பங்குபெற என்னை அழைத்திருந்தார்கள்.தம்பி கிருஷ்ணா தொடர்ந்து அழைப்பு விடுத்ததாலும் ,முதல்நாளே நான் ஒப்புக்கொண்டுவிட்டதாலும், வந்த வேறு அழைப்புக்களை எற்க்காமல் இதில் பங்கு கொண்டேன்.

தம்பி கிருஷ்ணாவின் “உணவு உபசரிப்புக்கு”ப் பின், தம்பி விஜயன், செந்தில்வேல், அளவலாவலுக்கு பின், தம்பிகள், கலாரசிகன் கரிகாலன், கமலக்கண்னன் புடைசூழ, புத்தக திருவிழாவின் ஒருசில அரங்குகளை சுற்றிப்பார்த்தோம்.

விஜயபாரதம் அரங்கில் ஒரு சின்ன “பர்ச்சேஸ்’—வழியில் நண்பர் மனுஷ்யபுத்திரனை சந்திப்பு,முடித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தேன்.

முதல் 35 நிமிடங்கள், நிகழ்ச்சி உணர்ச்சிகரமாக, ஆனாலும் நன்றாகவே போனது..நண்பர் வேல்முருகன் எப்போதும் போல, “தமிழர்களின் ஏகோபித்த தலைவனாக ‘தன்னை காண்பிக்கும் முயற்ச்சிகளை செய்து கொண்டு, பார்வையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிய உரையை ஆற்றிவந்தார்.

பார்வையாளர்களில் அதுவரை இல்லாத சுறுசுறுப்பு திடீரென ஏற்பட்டது.என்னை நோக்கிமட்டுமே கேள்விகள் அடுக்கடுக்காக வந்தது..கேட்டவிதம்- வந்தவிதம்- எல்லாமே இயல்புக்கு மாறாக இருந்தபோதே, ஏதோ “சூது” அரங்கேறுகிறது என்பது புரிந்தது..

என்னுடைய பதிலில் இடைமறித்து பார்வையாலர்கள் என்ற போர்வையில் வந்த சிலர், என் மீதும், ஆர்.எஸ்.எஸ் மீதும், பாஜகமீதும், பிரதமர் மோடிமீதும், “அமில வார்த்தைகளை” வீசினார்கள்.

அந்த’ கூச்சல்கள், ரசாபாசம்- ரகளையில்’, முடியவேண்டும், என்றும், ஒருவேளை “கைகலக்கும் அல்லது தாக்குதல் முடிவும் அவர்கள் எடுத்திருக்கலாம் என்பதும் அவர்கள் செயல்பாடுகளில் புரிந்தது..

என்னுடைய பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது.யார் இடைமறித்தாலும், கட்டுப்பாடாக இருக்கும் என் இயல்பு குணம், அப்போதும் தொடர்ந்தது.எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து நான் பேசி இருந்தால், ஒருவேளை நான் தாக்கப்பட்டிருக்கலாம்.

தம்பி விஜயன் மட்டும் தொடர்ந்து அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தார்..”தூண்டியவர்கள்”, பின்னாலிருந்துகொண்டு “துடிப்பாக” செயல் பட்டதால், ‘தூண்டி விடப்பட்டவர்கள்’ தொடர்ந்து “ஏசுவதை” தொடர்ந்தார்கள்.

அழைத்து வந்த விருந்தினர்களை திட்டமிட்டு அவமதிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்பு செய்திருக்கலாம்.ஆனால்,ஆர்.எஸ்.எஸ். கற்றுக்கொடுத்த கட்டுப்பாட்டால், திட்டமிட்டு கலகம் செய்தவர்களோடு, வாக்குவாதம் செய்யாமல், அமைதிகாத்தேன்.

சகோதரர் இதயதுல்லா இறுதிவரை உச்சகுரலில் தனது எதிர்ப்புகளை பதிவு செய்துகொண்டிருந்தார். திரு வேல்முருகன் மட்டும் அத்தனை சபை நாகரீகத்தையும் பண்பையும் குப்பையில் வீசிவிட்டு, ‘கும்பலை’ உசுப்பேற்றுவதிலும், ‘ஒன் அப் மேன்ஷிப்” வீரவசனங்கலையும் பேசியவண்ணம் இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடந்தேறிய விருந்தினர் அவமானங்கள், குறிப்பாக பாஜக—காங்,மீது நடந்தது, யதேச்சையாக நடந்த்தாக தெறியவில்லை.

டிரெயினை பிடிக்க நான் 9.58க்கே புறப்பட்டு என் காருக்கு வரும்போது என்னை இரண்டு இளைஞர்கள், துரத்திவந்து ‘ ஐய்யா, அங்கே ஒருகுழு நின்று கொண்டு, கேள்விகளை எழுதிக்கொடுத்து, உங்களை நோக்கி ஆட்களை அனுப்பியவண்ணம் இருந்தது”, ‘அனுப்பிய முகமும், பரிச்சயமானதாக இருந்தது’எனச்சொல்லி ஒருசில பெயர்களை சொன்னார்கள்.

நியூஸ்7 நிர்வாகத்தில் எனக்கு அத்தனை பேருமே நண்பர்கள்.இந்த நிகழ்ச்சி நியூஸ்7 நிர்வாகத்திற்கு ஒரு களங்கமா?, சறுக்கலா? என்பதை அவர்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

பாஜகவின் ‘மீடியா ஹெட்’ என்கிற முறையில், என் மனவேதனையை, வருத்தத்தை பதிவு செய்கிறேன்..தவறுக்கு காரணமான ‘அவர்களை’—நியுஸ்7- தண்டிக்கவேண்டாம்—கண்டிக்கவாவது செய்யுமா?..

நன்றி; எஸ்.ஆர்.சேகர்

மாநிலப் பொருளாளர் செய்தித் தொடர்பாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...