அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் – மோடி

 ‘பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,25) முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2024ம் ஆண்டு கடைசி கூட்டத் தொடர் இது. இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை 75வது அரசியலமைப்பு தினம் பார்லிமென்டில் கொண்டாடப்படும். பார்லிமென்டில் ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.

பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம். தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மக்கள் நம்மை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். விவாதத்தில் அதிகமான எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். பார்லிமென்டின் பாரம்பரியம், கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். கூட்டத்தொடரை சமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆக்கபூர்வமான பார்லிமென்ட் கூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கூட்டத்தொடர் நடப்பது சிறப்பு. பார்லிமென்டில் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பேசியதில்லை. அதிகார பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுகின்றனர். கூட்டத்தொடருக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...