அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் கோரிக்கை

அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜா கிதீன் இயக்க தளபதி பர்கான்வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட முழு அடைப்பு வன்முறையாக வெடித்ததால் கடந்த சில தினங்களாக அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. 
 
இந்தசூழ்நிலையில், பிரதமர் மோடி காஷ்மீர் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காஷ்மீர் வன்முறை  குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:- “ ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதி நிலையை கடைபிடிக்குமாறும் அப்போதுதான் அங்கு இயல்பு நிலை திரும்பும் என்று பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டார். அப்பாவி மக்கள் எந்தஇடையூறும் இழப்பையும் சந்திக்ககூடாது என்றும்  பிரதமர் தெரிவித்தார். அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியுள்ளதற்கு திருப்தி தெரிவித்த பிரதமர், மாநில அரசுக்கு தேவையான எத்தகைய உதவியையும் வழங்கதயாராக இருப்பதாக உறுதி அளித்தார்” இவ்வாறு அவர் கூறினார். 
 

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய சிலமணி நேரங்களில் காஷ்மீர் விவகாரம்தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார் என்பது கவனிக்கத்தக்கது. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருந்தபோதும் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்தும் அவ்வப்போது கேட்டுதெரிந்து கொண்டதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

One response to “அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் கோரிக்கை”

  1. Admin says:

    அமைதியை கடைபிடிக்க வேண்டும்
    நரேந்திர மோடி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...