அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் கோரிக்கை

அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜா கிதீன் இயக்க தளபதி பர்கான்வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட முழு அடைப்பு வன்முறையாக வெடித்ததால் கடந்த சில தினங்களாக அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. 
 
இந்தசூழ்நிலையில், பிரதமர் மோடி காஷ்மீர் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காஷ்மீர் வன்முறை  குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:- “ ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதி நிலையை கடைபிடிக்குமாறும் அப்போதுதான் அங்கு இயல்பு நிலை திரும்பும் என்று பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டார். அப்பாவி மக்கள் எந்தஇடையூறும் இழப்பையும் சந்திக்ககூடாது என்றும்  பிரதமர் தெரிவித்தார். அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியுள்ளதற்கு திருப்தி தெரிவித்த பிரதமர், மாநில அரசுக்கு தேவையான எத்தகைய உதவியையும் வழங்கதயாராக இருப்பதாக உறுதி அளித்தார்” இவ்வாறு அவர் கூறினார். 
 

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய சிலமணி நேரங்களில் காஷ்மீர் விவகாரம்தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார் என்பது கவனிக்கத்தக்கது. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருந்தபோதும் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்தும் அவ்வப்போது கேட்டுதெரிந்து கொண்டதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

One response to “அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் கோரிக்கை”

  1. Admin says:

    அமைதியை கடைபிடிக்க வேண்டும்
    நரேந்திர மோடி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...