காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனை சாவடிகள் அமைத்து ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |