காஷ்மீரத்துக்கு தேவை அறுவை சிகிச்சை….

பர்ஹான் வானி என்ற தீவிரவாதியைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கலவரத்தை அடக்கப் பாதுகாப்புப் படையி னர் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் ஐம்பது பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக் கானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். சிலர் பார்வையை இழந்திருக்கிறார்கள். ‘

காஷ்மீர் கலவரத்தைப் படைபலம் கொண்டு அடக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அது மேலும் மேலும் கசப்புணர்ச்சியை வளர்த்துவிடும். அதற்குப் பதிலாக அவர்களது மனப்புண்களை ஆற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்’ என்று அறிவு ஜீவிகள் அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கலவரம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் நடக்கிற உபதேசங்கள் தான் இவை.

பிரிவினை வாதம் பேசுவதும், பிரிவினைவாத அமைப்பை நடத்துவதும் அங்கே பலருக்கும் தொழிலாக இருக்கிறது. பாகிஸ்தானிடமிருந்து பணம் கிடைக்கிறது. அந்தப் பணத்திற்காக மத்திய அரசுக்கு எதிராகவும், இந்திய தேசியத்திற்கு எதிராகவும் பிரசாரம் நடக்கிறது. பிரிவினை கேட்டுப் போராட்டங்கள் நடக்கின்றன. கலவரங்கள் தூண்டப்படுகின்றன.

இப்போது நடக்கும் இந்தப் போராட்டத்திற்கும் கூட, போராட்டக்காரர்களுக்கு நாளொன்றுக்குத் தலா ஐநூறு ரூபாய் தரப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும் சரி, மக்கள் ஜனநாயகக் கட்சியும் சரி, பிரிவினைவாதிகளையும், பிரிவினைவாதத்தையும் ஒடுக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. தேர்தல் காலங்களில், பிரிவினைவாதிகளின் ஆதரவை நாடி நிற்கிற அவல நிலையில் தான் இந்த இரு கட்சிகளுமே இருக்கின்றன.

காஷ்மீர் மக்களின் மனப்புண், காஷ்மீரில் நிலவும் தீவிரவாத நடவடிக்கைகளால் தான் ஏற்பட்டது. இந்திய மக்களோ, மத்திய அரசோ மருந்திட்டு இந்தப் புண்ணை ஆற்றிவிட முடியாது.

அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணமாக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டிருக்கும் காஷ்மீருக்கான விசேஷ அந்தஸ்தை ரத்து செய்து, இந்தியாவின் எல்லா பகுதிகளும் காஷ்மீர் மக்களுக்குச் சொந்தம், எல்லா இந்தியர்களுக்கும் காஷ்மீர் சொந்தம் என்ற நிலையை அங்கு ஏற்படுத்துவதுதான் அந்த அறுவைசிகிச்சை.

நோயாளியின் நன்மை கருதிச் சில சமயங்களில் அவரது விருப்பம் இல்லாமலேயே கூட அறுவை சிகிச்சை செய்வது அவசியம். காஷ்மீர் மாநிலம் அந்த வகையான நோயாளியைப் போலத் தான் இருக்கிறது…

நன்றி துக்ளக்  Guru Ji

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...