சோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிராத்திக்கிறேன்

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அங்குள்ள பிராதான கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும்  ஷீலா தீட்சித்தை முதல்வர்வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. 
 
இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருந்து தேர்தல்பிரச்சாரத்தை இன்று துவக்கினார். சாலை வழியாக 8 கி.மீட்டர்,  தனது தேர்தல் பிரச்சாரத்தை சோனியாகாந்தி மேற்கொண்டார்.இந்நிலையில் பிரச்சாரத்தின் போது நடுவழியில் அவருக்கு திடீர்காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், பிரச்சாரத்தை  பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக டெல்லி திரும்பினார். சோனியா காந்தியை வருகையை எதிர்பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் இச்சம்பவத்தால் ஏமாற்றம் அடைந்தனர். 
 
இதற்கிடையே, சோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “ வாரணாசி தேர்தல் பிரச்சாரத்தில் சோனியாகாந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அறிந்தேன். அவரது உடல் நலம் விரைவாக தேறவும் நல்ல ஆரோக்கியம்பெறவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...