போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும்

போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
 
சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய தியாகச் செம்மல்கள் இன்றைய காலத்தில் உள்ள இளைய சமுதாயத்தில் சிலருக்கு தெரிவதில்லை.அதனால் சுதந்திரத்திற்காக பாடுபட்டவீரர்கள் பிறந்த இடத்தை தெரிந்துகொள்வதற்காக ‘திரங்கா யாத்ரா’ என்ற பயணத்தை (மூவண்ணக் கொடியுடன் பயணம் ) சுதந்திர தினத்தை யொட்டி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து 70 மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களைக் கொண்டு சுதந்திர போராட்டத்தில் ரத்தம் சிந்திய வீரர்கள் பிறந்த இடத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யச் சொன்னார். கட்டப்பொம்மன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோர் சிலைகளுக்கு நான் மரியாதைசெய்தேன்.
 
இன்றைய (நேற்றைய) தொழிலாளர்கள் போராட்டம் தேவையற்றது.தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ.350 என்று நிர்ணயித்து உள்ளோம். இந்த அரசு ஏழைகளுக்காக பலதிட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு பென்சன்தொகையை உயர்த்தி உள்ளோம்.
 
போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும். இந்தவேலை நிறுத்தத்தில் பெரியசங்கங்கள் ஈடுபடவில்லை. சில சிறிய சங்கங்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார் பேட்டியின்போது மாநில பாஜக.தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் உடன் இருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...