ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 23-வது ஆண்டு விழாவில் குடியரசுதுணைத்தலைவர் உரை

வணக்கம், நண்பர்களே, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு  மிகவும் மதிக்கப்படுபவர்.அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.

நண்பர்களே, அவரது கொள்கைகள் மற்றும்  இலட்சியங்களைப் பின்பற்றுவது எளிது. ஆனால் அவரது  இடத்துக்குச் செல்வது கடினம். மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரின் தாயகமாக உள்ள பாரதத்தின்  முன்னணி ஆளுமைகளில் ஒருவர் அவர். தேசத்தின் நலனுக்காக உழைக்கிறார். அவர் இந்த  ஸ்வர்ண  பாரத்  அறக்கட்டளையைத் தொடங்கினார். அவர் அனைத்து கடினமான  காலங்களையும்  பார்த்தவர்.

ஸ்வர்ண பாரத்  அறக்கட்டளை,  அதன் 23 வது  ஆண்டில்,  அடி எடுத்து  வைத்துள்ளது.  இந்த அறக்கட்டளை  சிறப்பான  முறையில் சேவைகளை  வழங்கி வருகிறது. விரைவில்  அதன்  வெள்ளி  விழா கொண்டாட்டத்தை  நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். ஒவ்வொரு  இந்தியனும் பொருளாதார  தேசியவாதத்தை நம்ப வேண்டும். பொருளாதார தேசியவாதம்  சுதேசியின் ஒரு  அம்சம். நாம்  பல  பொருட்களை  இறக்குமதி  செய்கிறோம்.  இதன்  மூலம்  நமது அந்நியச்  செலாவணி வெளியேறி வருகிறது.  இந்த நாட்டில் தயாரிக்க  வாய்ப்புள்ள பொருளை இங்கேயே தயாரிக்க  வேண்டும். நண்பர்களே, மற்றொரு தீவிரமான பிரச்சினை இயற்கை  வளங்கள்: நாம்  தேவையான நுகர்வை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். எந்த வடிவத்திலும் அனைத்து  இயற்கை  வளங்களும்  உகந்ததாக பயன்படுத்தப்பட  வேண்டும்.

நமக்கு ஒரு கலாச்சாரம் இருக்க வேண்டும். நாம் எப்போதும் தேசத்தை முதன்மையாக  வைத்திருக்க வேண்டும், அரசியல் நலனுக்கு அப்பாற்பட்டு, சுயநலனுக்கு அப்பாற்பட்டு,  பொருளாதார நலனுக்கு அப்பாற்பட்டு தேசத்தை முதன்மையாக வைத்திருக்க வேண்டும்.

நான் இந்த அறக்கட்டளையின் உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் அதன் காலாட்படை வீரன்போல உள்ளேன். நாட்டில் உள்ள சிலர், பொருத்தமற்ற காரணங்களுக்காக, தேசிய நலனை விட தங்கள் அரசியல் நலனை முக்கியமாக வைத்துள்ளனர். அவர்கள் மாறுவார்கள் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்; நாட்டின் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களுக்கு மரியாதை செலுத்தி தேசத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வோம். நன்றி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...