ராஜ்நாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது கோவையைசேர்ந்த இந்து முன்னணி தலைவர் சசிகுமார், கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், இன்று வரை இந்து இயக்கதொண்டர்கள் 17 பேரை அநியாயமாக குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
 
இதே போல், திண்டுக்கல்லில் செப்டம்பர் மாதம் 25–ந்தேதி பாஜக. தலைவர் போஸின் கார் மற்றும் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல்குண்டால் தாக்கப்பட்டதையும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தொண்டர் நரஹரி மீது இம்மாதம் 4–ந்தேதி கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதையும் உள்துறை மந்திரியிடம் எடுத்துரைத்தார்.
 
கடந்த செப்டம்பர் மாதம் 19–ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இந்து இயக்கப் பொறுப்பாளர் சூரி ஓசூரில் படுகொலை செய்யப்பட்டதையும், அதே நாளில் திண்டுக்கல்லில் இந்து முன்னணி நகர செயலாளர் சங்கர் கணேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதையும் ராஜ்நாத்சிங்கிடம் விளக்கி கூறினார்.
 
இதுபோல் தமிழகத்தில் பெருகி வரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், பயங்கரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்வது குறித்து துரித நடவடிக்கை எடுக்கவும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...