பூமியை அச்சுறுத்தும் அஸ்டிராய்ட்கள்

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் -அஸ்டிராய்ட் -பூமிக்கு நெருக் கமாக வந்து பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. அப்போது அது பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலை வில் இருந்தது. பூமிக்கும் இதர கோள் களுக்கும் இடையிலான தூரம் கோடிக் கணக்கான கிலோ மீட்டர் என்பதை வைத் துப் பார்த்தால் 4 லட்சம் கிலோ மீட்டர் என்பது “அருகாமையில்” என்று சொல்லத் தக்கதே.

இந்த விண்கல் 2004 டிசம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட போது இது இந்த நூற் றாண்டின் பிற்பகுதியில் பூமியின் மீது வந்து மோதலாம் என்று கருதப்பட்டது. ஆனால் பின்னர் இதன் சுற்றுப்பாதையை விரிவாக ஆராய்ந்த போது அவ்வித ஆபத்து ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டது. பறக்கும் பாறை என்று சொல்லத்தக்க இந்த விண்கல்லின் நீளம் சுமார் 700 மீட்டர். எனினும் பூமிக்கு “ஆபத்தை உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ள விண்கல்” என்ற பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது.

நிபு ணர்கள் தயாரித்து வைத்துள்ள இப்பட் டியலில் சுமார் 783 விண்கற்கள் இடம் பெற்றுள்ளன. சிறியதும் பெரியதுமான இந்த விண்கற்கள் பூமியின் மீது மோத வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது வந்து மோது மேயானால் அதன் விளைவாகப் பேரழிவு ஏற்பட்டு மனித இனமே அழிந்து போக வாய்ப்புள்ளது. பல மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் இப்படியான பறக்கும் பாறை ஒன்று பூமியின் மீது வந்து மோதியிருக்கலாம் என்றும் அதன் விளை வாகவே பூமியில் அப்போது பேரெண்ணிக் கையில் இருந்த டைனோசார் விலங்குகள் கிட்டத்தட்ட பூண்டோடு அழிந்து போனதா கவும் ஒரு கருத்து உள்ளது.

புதன், வியாழன், பூமி போன்று பல கோள்கள் தனித்தனிப் பாதையில் – தனித்தனி வட்டங்களில் -சூரியனைச் சுற்றி வருகின்றன. செவ்வாய் கோளுக்கும் அதை அடுத்த வட்டத்தில் உள்ள வியாழனுக்கும் நடுவே ஏதோ ஒரு கோள் இருந்திருக்க வேண்டும் என்றும் அது சுக்கு நூறாக உடைந்து விட்டதாகவும் ஒரு கருத்துஉள்ளது.

போடே என்ற ஜெர்மன் விஞ்ஞானி சூரியனுக்கும் பல்வேறு கோள்களுக்கும் உள்ள தூரத்தை வைத்து ஒரு “குருட்டாம் போக்கு” கணக்குப் போட்டு 1772 ஆம் ஆண்டில் மேற்படிக் கருத்தைக் கூறினார். பிறகு வானவியல் நிபுணர்கள் தொலை நோக்கி மூலம் வானை சல்லடை போட்டுத் தேடியபோது பல குட்டிக் கோள்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றில் பல, சில நூறு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டவை.

இவை தவிர போடே குறிப்பிட்டுக் கூறிய சுற்றுப் பாதையில் “ஆட்டு மந்தை” போல எண்ணற்ற குட்டிக் கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்துமே சூரியனைச் சுற்றி வருபவை. இவை ஆங்கிலத்தில் அஸ்டிராய்ட்ஸ் என்று குறிப் பிடப்படுகின்றன. இந்த அஸ்டிராய்டுகளில் பல, தமது சுற்றுப் பாதையிலிருந்து விலகி பூமியின் சுற்றுப் பாதையைக் கடந்து சூரியனைச் சுற்றிச் செல்கின்றன.

சில அஸ்டிராய்டுகள் பூமிக்கு அருகில் பூமியைக் கடந்து செல்கின்றன. சமீபத்திய கணக்குப்படி 3 லட்சத்துக்கும் அதிகமான அஸ்டிராய்டுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் பெயர்கள் உண்டு. ஆரம்ப நாட்களில் இவற்றைக் கண்டுபி டித்தவர்கள் விசித்திரமான பெயர்களை வைத்தனர். இப்போது சர்வதேச வானவியல் அமைப்பின் அங்கீகாரத்துடன் முதலில் எண்கள் அளிக்கப்படுகின்றன. பின்னர் பெயர் வைக்கப்படுகிறது. தமிழகத்தில் காவலூர் என்னுமிடத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடம் 1988 பிப்ரவரியில் கண்டு பிடித்த ஒரு அஸ்டிராய்டுக்கு பிரபல கணித மேதை ராமானுஜத்தின் பெயர் வைக் கப்பட்டுள்ளது.

2000 நவம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு அஸ்டிராய்ட் பெயர் வருணன். மாதம் ஒன்றுக்கு சுமார் 5000 வீதம் புதிது புதிதாக அஸ்டிராய்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் அஸ்டிராய்ட் ஒன்றினால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் போலத் தோன் றினால் பூமியை எவ்விதம் காப்பாற்றுவது என்பது பற்றிப் பல திட்டங்கள் பரிசீலிக் கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...