வசம்பு என்னும் அறிய மருந்து

 சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் பொருளாகும். அதிலும் குறிப்பாக 'பச்சைப்பிள்ளைகள்' இருக்கும் வீட்டில் ஐந்தரைப் பெட்டியில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கிய மருந்துப் பொருளாகும்.

பச்சைப் பிள்ளைகள் திடீர் திடீரென்று அழும். வயிற்று வலியாக இருந்தாலும் அழும். வாயுப் பொருமலினாலும் அழும், உடனே இந்த வசம்பை ஆமணக்கெண்ணையில் முக்கிச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து வெந்நீரில் கலந்து கொடுத்தால் போதும், குணம் கிடைக்கும்.

சரியாகச் ஜீரணமாகாமல் குழந்தை வாந்தி எடுத்தாலோ, மாந்தத்தினால் வயிறு உப்பி இருந்தாலோ என்னவென்று கூற முடியாத பச்சைக் குழந்தைகள் விட்டுவிட்டு அழுதாலோ வசம்பை மருந்தாகக் கொடுத்தால் போதும். அழுகையை நிறுத்தி விடும்.

புத்தம் புதிய தேனிலும் கலந்து கொடுக்கலாம். இவ்விதம் தொடர்ந்து கொடுத்து வர விக்கல், மூச்சுத் திணறல், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை குணமாகும்.

பேதியைக் கட்டுப்படுத்தவும் வசம்பு நல்ல மருந்தாகும். குழந்தைகள் உள்ள வீட்டில் எப்போதும் வசம்பு இருக்க வேண்டும். மண்சட்டியில், வசம்பை இடித்துத் தூளாக்கி அதிலிட்டுப் போதிய அளவு நீர்விட்டு அவ்விதமே மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறி இருக்கும் காலை வேளையில் இந்த நீரை வடித்துக் கொடுக்க பேதியை நிறுத்திவிடலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கு வசம்பு நல்ல மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும். வசம்பை இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஓர் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர ஒருவாரத்தில் குணம் கிடைக்கும். எனவே, நரம்புத்தளற்ச்சியால் துன்பமடைபவர்கள் நம்பிக்கையுடன் இந்த மூலிகையைக் கையாண்டால் போதும் குணம் கிடைக்கும்.

வசம்பு, கறிமஞ்சள், ஏலரிசி இவை ஒவ்வொன்றையும் 15 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவைகள் அனைத்தையும் ஓரிரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் காலையில் அம்மியில் வைத்துப் போதிய தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.

அதன்பின்னர் இந்த விழுதை ஏறக்குறைய அரை லிட்டர் அளவு தேங்காய் எண்ணையில் கலந்து சிறு தீ எரித்துப் பக்குவமாமக் காய்ச்சி எடுக்க வேண்டும். எண்ணெய் முருகிவிடக்கூடாது.

இந்தத் தைலத்தைச் சொறி, சிரங்கு, மற்றும் படும்புண்களின் மீது கோழி இறகால் தொட்டுப் போடக் குணம் கிடைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...