நாடாளுமன்ற புதியகட்டிடத்தின் மேற்கூரையில் வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற புதியகட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசியசின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திறந்துவைத்தார். மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதியநாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக்கூட்டத்திற்கு 1,272 இடங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.971 கோடி மதிப்பில் 62000 சதுர மீட்டரில் முக்கோணவடிவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனைதாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் இந்த கட்டிடம் அமைகிறது.

குளிர்கால கூட்டத் தொடருக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதியநாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்திலான தேசியசின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தேசிய சின்னத்தை தாங்கி பிடிப்பதற்காக 6500 கிலோ எடையில் ஸ்டீலிலான அமைப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஷ்ரம் ஜீவிகளுடன் கலந்துரை யாடினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதியநாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமும் 9.5 டன் எடையும் உடைய வெண்கலத்தில் உருவான பிரமாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.