பாராளுமன்றத்துக்கு சரியாக வந்தாலே!, தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான்

கருப்பு பண ஒழிப்பு என்று 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது, இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்று பேசி காமடி செத்துள்ளர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

ஆனால் உண்மையில் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கஷ்ட்டப்பட்டு ஊழல் செய்து மறைத்து வைத்திருந்த பணம் எல்லாம் இப்படி காகிதமாகிவிட்டதே என்ற பூகம்பம் அது!, அவ்வப்போது கைக்கொடுத்த சாரதா சிட்பண்ட் மோசடி பணம், நக்சலைட்டுகளின் பணம் எல்லாம் போச்சே என்ற பூகம்பத்தை மம்தா பேனர்ஜிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது, டெல்லி, பீகார், மேற்கு வங்காளம் என்று பேரணிகளை நடத்தி மிரட்டி மக்களின் ஆதரவின்றி ஓய்ந்தும விட்டார் அவர்.

விரைவில் தேர்தல் மையம் கொள்ள உள்ள  உ.பி.,யிலோ இது வரை சேர்த்த ஊழல் கருப்பு பணத்தையும், சீட்டை நோட்டுக்கு விற்று வசூல் செய்த பணத்தையும் என்ன செய்வது, செல்லாத பணத்தை வைத்து எப்படி ஓட்டை விலைக்கு வாங்குவது என்ற பயம் முலாயம் சிங் மற்றும் மாயாவதிக்கு ஒருசேர வந்து பூகம்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது ஒருபுறம் என்றால் தீவிரவாதிகள் முதல் பிட் பாக்கெட்டுகள் வரை இந்த பூகம்பத்தில் இருந்து தப்பவில்லை காஸ்மீரில் தினம் ரூ 500 கள்ள நோட்டை  ஊதியமாக பெற்று கல்லெறிந்த இளைஞர்கள் எல்லாம் இன்று நல்லவர்களாக ஆகிவிட்டார்கள். அங்கு இப்போது பெல்லட் குண்டுகள் வெடிப்பதில்லை. நாடு முழுவதும் 65 சதவீதம் வரை குற்றங்கள் குறைந்துள்ளன. நாட்டின் பல் பகுதிகளில் பதுங்கி இருந்த ரவுடிகளும், தாதாக்களும் பிழைப்பு நடத்த முடியாமல் கைதாகி வருகின்றனர். இப்படி மோடி தனது செயலின் மூலம் பலருக்கும் பல விதத்தில் பூகம்பத்தைத்தான் தந்துள்ளார்.

 

ஆனால் 40 சதவித நாட்கள் கூட பாராளுமன்றத்துக்கு சரியாக வந்திராத  ராகுல் காந்தி!, அப்படியே வந்தாலும் பெரும்பாலான நாட்களை  தூங்கியே கழித்த ராகுல் காந்தி!!. தான் பேசினால் பூகம்பம் வரும் என்கிறார். அவர் சரியாக வந்தாலே!, அவை நடவடிக்கைகளை தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான், அவர் பேச வேண்டியதில்லை.       

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...