மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற நாட்டுக்கான புதிய பாராளுமன்ற கட்டிட திட்டம். இது டிசம்பர் 2020 ஆண்டு தொடங்கப்பட்டு வரும் மே 28 இல் திறப்பு விழா காண இருக்கிறது. அதாவது தொடங்கிய இரண்டே வருடத்தில் முடிக்கப் பட்டுள்ளது. ரூ. 970 கோடியில், 65,000 ச.மீ பரப்பளவில் நவீன தொழில்நுட்பத்துடன் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கும் இது தேசத்தின் பெருமையாகும்.

ஆனால் அன்று புதிய பாராளுமன்றம் தேவையற்றது, வீண் செலவு என்று ஆரம்பம் முதலே சர்ச்சைகட்டிய எதிர்க்கட்சிகள். 1927இல் கட்டப்பட்ட பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்ற நிதர்சனத்தையும் உணர மறுத்த எதிர்க்கட்சிகள். இன்று ஒவ்வொன்றையும் நேரடியாக பார்த்து பார்த்து கட்டிய பிரதமர் மோடி அதை திறந்து வைக்க கூடாது, ஜனாதிபதிதான் திறக்கவேண்டும் இதுதான் மரபு, இது ஜனாதிபதியை, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவே நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று ராகுல் காந்தியின் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சை கட்டுகின்றனர், இதில் திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளும் அடக்கம்.

அதாவது மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் மனோபாவம் தான் இது. 1975 இல் பாராளுமன்றத்தில் ஒரு புதிய கட்டிடம் இந்திரா காந்தியாலும், 1987இல் பாராளுமன்ற நூலகம் ராஜூவ் காந்தியாழும் திறக்க பட்டது என்பது சரி என்றால்.

தமிழகத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தை ஆளுநரை விடுத்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்ததும், வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கும் சோனியா காந்தி சத்தீஸ்கர் சட்டமன்றத்தை திறந்து வைத்ததும், சமீபத்தில் தெலுங்கானா மாநில சட்டமன்ற புதிய கட்டிடத்தை அம்மாநில ஆளுநர் தமிழிசையை விடுத்து மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் திறந்து வைத்ததும் மரபு என்றால். மோடி என்று வரும்போது மட்டும் எதிரிப்பு தெரிவிப்பது ஏன் .

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசி முடித்த பின்னும் மரபுகளை மீறி தமிழக முதல்வர் பேசியாதும், அவையிலிருந்து ஆளுநர் வெளியேறும் விதமாக நடந்து கொண்டதும், ஆட்சியில் இருப்பவர்கள் அவரை ஒருமையில் பேசியதும் எத்தகைய மரபு.

பாராளுமன்ற துவக்க நிகழ்ச்சிகளை எத்தனை அரசியல் கட்சிகள் வேண்டுமானாலும் புறக்கணித்துவிட்டு செல்லட்டும், குறைகூறி நிற்கட்டும். ஆனால் மூச்சுக்கு மூச்சு தமிழர் நலன் பேசும் திமுக புறக்கணிப்ப்பது அபத்தமான ஒன்று.

ஏனென்றால் 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சோழர் காலத்தைய பேரரசர்கள் செங்கோல் ஏந்தி நீதி தவறாமல் ஆட்சி செய்த பண்பாட்டை தொடர்ந்திடும் விதமாக, தங்கத்திலான செங்கோல் திருவாடுதுறை அதினத்தால் புனித நீர் தெளித்து நேருவிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது உத்திர பிரதேசத்தில் ஏதோ ஒரு அருங்காட்சியத்தில் உறங்கி கொண்டிருந்தக அந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்பட இருக்கிறது.

செம்மை என்ற தமிழ் சொற்றொடருடன் அலங்கரிக்க இருக்கும் இது தமிழுக்கு, தமிழகத்துக்கு கிடைத்த பெருமையல்லவா?. தமிழின் பெருமையை நிலைநாட்ட ஹிந்தி எழுத்துக்களை தேடி சென்று கருப்பு தாரடிக்கும் திமுக. இந்நேரம் இதை வரவேற்றிருக்க வேண்டாமா?. கருப்பு சிவப்பை விடுத்தது கவி கொடி ஏந்தி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றிருந்தாலும் அது தகும் .

நன்றி தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...