மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை

வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ஊழல், உரிமைகள் பறிப்பு என 5 பிரச்சினைகளால் மேற்குவங்கம் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநிலமக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திரமோடி,

“இன்று, மேற்குவங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழுவங்காளமும் இனி கொடுமை மற்றும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது.

மேற்கு வங்கம் 5 முக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, பரவலாக நடைபெற்று வரும் வன்முறைச்சம்பவங்கள். இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலை உள்ளது.

இரண்டாவது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடையே வளர்ந்துவரும் பாதுகாப்பற்ற உணர்வு. அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடூர குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மூன்றாவது நெருக்கடி, அதிகரித்து வரும் வேலையின்மை. வேலை வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள்.

நான்காவது பரவலானஊழல். இது அரசு எனும் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது.

ஐந்தாவது நெருக்கடி, ஆளும் கட்சியின் சுயநல அரசியலில் இருந்து உருவாகிறது, இது ஏழைகளின் உரிமைகளை பறிக்கிறது. முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் நடந்த சம்பவங்கள், டி.எம்.சி அரசாங்கத்தின் கொடுமைக்கும், சட்டம்ஒழுங்கைப் பராமரிக்கத் தவறியதற்கும் தெளிவான எடுத்துக்காட்டுகள்.

மேற்குவங்க ஆசிரியர் ஆட்சேர்ப்பில் நிகழ்ந்த ஊழல் மற்றும் முறைகேடுகள், ஆயிரகணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.

இது சில ஆயிரம் ஆசிரியர்களின் அழிவுமட்டுமல்ல, முழு கல்வி முறையும் சீரழிந்து வருகிறது. இப்போதுகூட, டி.எம்.சி தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மாறாக, அவர்கள் நீதிமன்றங்களையும் நீதித்துறை அமைப்பையும் குறை கூறுகிறார்கள்.

மேற்கு வங்கத்தின் இளைஞர்களும் ஏழைகளும் நடுத்தரவர்க்க குடும்பங்களும் இந்த ஊழலின் சுமையை சுமந்து வருகின்றன. மேற்குவங்க மக்கள் இப்போது டி.எம்.சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.

மேற்கு வங்க அரசு சமீபத்திய நிதி ஆயோக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியை விட அரசியலில் அதிக ஆர்வம் காட்டுகிறது.” என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...