ரூபாய் நோட்டு வாபசால் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 60 சதவீதம் வீழ்ச்சி

ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பணப் பரிமாற்றம் 50 சதவீதம் வீழ்ச்சி யடைந்ததுடன், காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களும் 60 சதவீதம் வீழ்ச்சியடைந் துள்ளதாக உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஊக்குவிக்க அளிக்கப்படும் கள்ள நோட்டுகள் பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப் படுகின்றன. பாகிஸ்தானின் குவிட்டா நகரில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பரிவர்த்தனை 50 சதவீதம் பாதிக்கப் பட்டது. இதனால், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பணம்கொடுக்க முடியவில்லை. காஷ்மீரில் கல் எறியும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கும் பணம்கொடுக்க முடியவில்லை.


இதனால், டிசம்பர் மாதத்தில் காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் 60 சதவீதம்குறைந்தன. காஷ்மீரில் இயங்கிவரும் பயங்கரவாதிகளுக்கு, கைகளில் ரொக்கமாக பணம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ்காரணமாக, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிபெற்றன.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, நக்சலைட்களுக்கு கடும்பாதிப்பு ஏற்பட்டது. அவர்களின் வருமானம் குறைந்ததுடன், அவர்கள் வைத்திருந்த சொத்துகளும் குறைந்தது. இதனால், அவர்கள் பதுக்கிவைத்திருந்த பணத்தை மாற்றித்தரும்படி பொதுமக்களிடம் கெஞ்ச துவங்கினர்.


ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, நக்சலைட் அமைப்பிடமிருந்து ரூ.90 லட்சம்வரை பறிமுதல் செய்யப்பட்டது. பல நக்சலைட்கள் பாதுகாப்பு படை யினரிடம் சரணடைந்தனர். வட கிழக்கு மாநிலங்களில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளும், ஆயுதங்கள்வாங்க முடியாமல் சிரமப்பட்டதுடன், அவர்களுக்கு கடும் இழப்புஏற்பட்டது எனக்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...