ரூபாய் நோட்டு வாபசால் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 60 சதவீதம் வீழ்ச்சி

ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பணப் பரிமாற்றம் 50 சதவீதம் வீழ்ச்சி யடைந்ததுடன், காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களும் 60 சதவீதம் வீழ்ச்சியடைந் துள்ளதாக உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஊக்குவிக்க அளிக்கப்படும் கள்ள நோட்டுகள் பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப் படுகின்றன. பாகிஸ்தானின் குவிட்டா நகரில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பரிவர்த்தனை 50 சதவீதம் பாதிக்கப் பட்டது. இதனால், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பணம்கொடுக்க முடியவில்லை. காஷ்மீரில் கல் எறியும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கும் பணம்கொடுக்க முடியவில்லை.


இதனால், டிசம்பர் மாதத்தில் காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் 60 சதவீதம்குறைந்தன. காஷ்மீரில் இயங்கிவரும் பயங்கரவாதிகளுக்கு, கைகளில் ரொக்கமாக பணம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ்காரணமாக, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிபெற்றன.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, நக்சலைட்களுக்கு கடும்பாதிப்பு ஏற்பட்டது. அவர்களின் வருமானம் குறைந்ததுடன், அவர்கள் வைத்திருந்த சொத்துகளும் குறைந்தது. இதனால், அவர்கள் பதுக்கிவைத்திருந்த பணத்தை மாற்றித்தரும்படி பொதுமக்களிடம் கெஞ்ச துவங்கினர்.


ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, நக்சலைட் அமைப்பிடமிருந்து ரூ.90 லட்சம்வரை பறிமுதல் செய்யப்பட்டது. பல நக்சலைட்கள் பாதுகாப்பு படை யினரிடம் சரணடைந்தனர். வட கிழக்கு மாநிலங்களில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளும், ஆயுதங்கள்வாங்க முடியாமல் சிரமப்பட்டதுடன், அவர்களுக்கு கடும் இழப்புஏற்பட்டது எனக்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...