நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட்

நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு பயனளிக்கும் விதமாக, மத்தியநிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்த மத்திய பட்ஜெட் 2023-24–ல் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார். தள்ளுபடி, வரி அமைப்பில் மாற்றம், புதியவரிவிதிப்பு நடைமுறையில் வரிவிலக்கு நீட்டிப்பு, அதிக கூடுதல் வரிவிகிதத்தை குறைத்தல்,
அரசுத்துறை நிறுவனங்களை சாராதவர்கள் பெறும்விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரம்பு நீட்டிப்பு போன்றவைகள் தொடர்பான அறிவிப்புகள் உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு கணிசமான முறையில் பயனளிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

மத்திய அமைச்சரின் முதல் அறிவிப்பில், புதிய வரிவிதிப்பு நடைமுறையில் 7 இலட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வரம்பை உயர்த்தியிருப்பது முன் மொழியப்பட்டது. அதாவது, புதிய வரிவிதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 7 இலட்சம் ரூபாய் வரை வரிக்கட்ட தேவையில்லை. தற்போது பழைய மற்றும் புதிய வரிவிதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 5 ரூபாய் இலட்சம் வரை வரிக்கட்ட தேவையில்லாத நிலை உள்ளது.

மேலும் இந்தப் புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரிக் கட்டுபவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது. 9 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம்கொண்ட தனிநபர் 45,000 ரூபாய் வரி கட்டினால் போதும். இது அந்த தனிநபரின் வருமானத்தில் 5 சதவீதம் ஆகும். அந்த தனிநபர் இதுவரையில் அவருடைய வருமானத்தில் 25 சதவீதமான 60,000 ரூபாய் வரி செலுத்தி வருகிறார். அதே போல் ஆண்டு வருமானம் 15 இலட்சம் ரூபாய் பெறும் தனிநபர் 1.5 இலட்சம் ரூபாய் வரியாக கட்டினால் போதும். அது அவருடைய வருமானத்தில் 10 சதவீதமே ஆகும். இதுவரையில் தனிநபர் வரியாக 1,87,500 ரூபாய் கட்டி வருகிறார். தற்போதைய வரிவிகிதத்தில் 20 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முக்கிய அறிவிப்பு, சம்பளம் பெறுபவர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப் பெரிய அளவிலான ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு வருமானம் 15.5 இலட்சம் ரூபாய் அல்லது கூடுதல் சம்பளமாக பெறுபவர்களுக்கு 52,500 ரூபாய் வரையில் நன்மை தரும்.

மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தொடர்பான நான்காவது முக்கிய அறிவிப்பில், ஆண்டுவருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிககூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது முக்கியஅறிவிப்பின் கீழ் விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரிவிலக்கு வரம்பை நீட்டிப்பு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது 25 இலட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்குபெற முடியும். இதுவரையில்.3 இலட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...