கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்கள் 2019 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடப்படும்

சுவிட்சர்லாந்தில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்கள் 2019 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கறுப்புப்பணத்தை அவர்களது  வங்கிக் கணக்குகளில் பராமரித்து வருகின்றனர். இவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும் என அனைத்து நாடுகளும் சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. 

இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சுவிஸ் அரசு, 38 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பினர்களை கொண்ட  'AEOI' எனப்படும் 'தகவல் பரிமாற்ற' நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இதனால், அடுத்தாண்டு முதல், பல்வேறுநாடுகளுக்கு கறுப்புப்பணம் குறித்த தகவல்களை சுவிஸ் அரசு வழங்கவுள்ளது. இந்நிலையில், கறுப்புப்பணம் பதுக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என மத்திய அரசு முன்வைத்திருந்த நீண்ட நாள் கோரிக்கையை சுவிஸ் அரசு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

 இதன்காரணமாக, 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மத்திய அரசுக்கு கறுப்புப் பணம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி,  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணம் முழுவதுமாக மீட்கப்படும் என உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...