சாத்தியமில்லாதது எதுவும் கிடையாது என்று நம்புபவர்வர் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திரமோடி குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாவகத் புதன்கிழமை வெளியிட்டார்.


தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி குறித்து சுலாப் இண்டர் நேஷனல் அமைப்பின் தலைவர் பிந்தேஸ்வர் பதாக் எழுதிய 'நரேந்திரதாமோதர் தாஸ் மோடி: தி மேக்கிங் ஆஃப் எ லெஜெண்ட்' என்ற தலைப்புடைய புத்தகம் வெளியிடப்பட்டது. அதை மோகன் பாகவத் வெளியிட்டார்.


அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்புத்தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்து, குஜராத் முதல்வர், பிரதமர் ஆகிய பதவிகளுக்கு பிரதமர் மோடி வந்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:


ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்புகளை வகித்த மோடி, முதல்வராவதற்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் தற்போதும் இருக்கிறார். புகழும், விளம்பரமும் அவரிடம் எந்ததாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கடினமான பணி, துணிச்சல், பொறுமை, நல்லெண்ணம் போன்ற நற்பண்புகளை கொண்டவர் பிரதமர் .
சாத்தியமில்லாதது எதுவும் கிடையாது என்று நம்புபவர்வர். அதற்காக கடினமாகப் பணியாற்றுவார்.
நாட்டுமக்களுக்கு, தற்போது அவர்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு, நரேந்திர மோடி என்ற நல்ல மற்றும் திறமையான ஒப்பந்ததாரர் கிடைத்துள்ளார். இதிலும் ஓர் அபாயம்இருக்கிறது. அனைத்து பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, பிறர் தூங்கச் சென்றுவிடுகின்றனர். இதுபோல் நடக்கக்கூடாது.
பிரதமர் மோடி குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புத்தகமானது, அவர் போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று மோகன் பாகவத் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...