பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளில் ஒன்றான Gcon விருது

நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருது பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருது இதுவாகும். மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா சென்றடைந்துள்ள நிலையில், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு முதலில் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவிற்கு சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபு உடன், இந்தியா-நைஜீரியா இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, “G20” மாநாட்டில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு “G20” மாநாட்டை நடத்திய நாடு என்ற முறையில், இந்தியாவிற்கு “டிரோய்கா” உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “G20” மாநாட்டை முடித்துவிட்டு, புதன்கிழமை கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்ஃபான் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...