இளைஞர்களின் வளர்ச்சியே நாட்டையும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும்

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (தேர்வு வீரர்கள்) எனும் ஆங்கிலநூலின் தமிழ் பதிப்பை சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டார்.

பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (Exam Warriors) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் தமிழாக்கநூல் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.

நூலின் முதல் பிரதியை ஆளுநர் ஆர்.என்.ரவிவெளியிட, சென்னை‌ ஐஐடி இயக்குநர் வி.காம கோடி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் துணை ஆணையர்ருக்மணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது: பொதுத் தேர்வு எழுதுவதற்கு மட்டுமின்றி உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் இந்த புத்தகம் உதவிகரமாக இருக்கும் . பிரதமர் மோடி பல்வேறுகடினமான சூழல்களை கடந்து வந்துள்ளார். அவையே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல அவருக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது. அதன் விளைவாக நாடு தற்போது பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியாவின் எதிர்காலம் வருங்கால தலைமுறையான உங்கள் கைகளில்தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சியே நாட்டையும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். தேர்வைகண்டு பயப்பட வேண்டியதில்லை. முறையாக திட்டமிட்டு படித்தால் வெற்றிபெறலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். குழந்தைகள் வெற்றிபெறுவதற்கு பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியமாகும். வாழ்வில் வெற்றிபெற நேர மேலாண்மை மிகவும் முக்கியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, ‘‘மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகுறித்த பயம் இருக்கும். அதை கடந்து செல்லஇந்த புத்தகம் உதவியாக இருக்கும்.ஒருதேர்வு உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு வாய்ப்புகள் நமக்குள்ளன. அதை முறையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...