புதன் கிழமையுடன் 3 ஆண்டுகளை அமித்ஷா நிறைவு செய்தார்

பாஜகவின் தேசியத்தலைவராகப் பொறுப்பேற்று புதன் கிழமையுடன் 3 ஆண்டுகளை அமித்ஷா நிறைவு செய்கிறார்.கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சிக்குவருவதற்கு முன், அக்கட்சி இருந்த நிலைமையை அமித் ஷாவும், பிரதமர் மோடியும் தற்போது மாற்றியுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரைகளும், அமித் ஷாவின் நிர்வாகத் திறமையும் பாஜகவை மொத்தம் 13 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், 5 மாநிலங்களில் கூட்டணிகட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
ஆகமொத்தம் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சிபுரிந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.


அமித் ஷாவின் சிறந்த நிர்வாகப்பணி காரணமாக, அஸ்ஸாம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து முதல் முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அமித் ஷாவின் கட்சிப்பணிகள் குறித்து பாஜகவினர் கூறியதாவது:நாடுமுழுவதும் கட்சியை விரிவுப்படுத்தியவர் அமித் ஷா.
பாஜக நிறுவனர்களான ஷியாம பிரசாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்யாய் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி அமித் ஷா கட்சிப் பணியாற்றி வருகிறார்.


பெண் குழந்தை கல்வித் திட்டம், தூய்மை கங்கை திட்டம், பயிர்க்காப்பீடு திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கட்சியினருக்கு அமித் ஷா வலியுறுத்தி வந்தார். இதன்காரணமாக, இந்தத் திட்டங்கள் அனைத்து தரப்புமக்களிடம் சென்று சேர்ந்தது.


ஒடிஸா, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் பலத்தை அதிகரிப்பதற்கான பல்வேறுபணிகளில் அமித் ஷா கவனம் செலுத்தி வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளும் தினமும் 541 கி.மீ. தொலைவுக்கு கட்சிக்காகப் பயணம் செய்து பணியாற்றியவர் அமித் ஷா. அவரது சிறப்பான பணி 4-ஆவது ஆண்டிலும் தொடரும் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...